என்னைக் கவர்ந்த ஒரு மனிதர் - தளபதி விஜய்
என்னைக் கவர்ந்த ஒரு மனிதர் என்று யார் என்னிடம் கேட்டா லும் என்னுடைய பதில் என்றும் விஜய் என்ற மூவெழுத்தாகத்தான் இருக்கும் என்பதில் எனக்கு எவ்வித ஐயமும் இல்லை. விஜய் என்ற பெயரைக் கூறினால் அவரைப் பற்றி சிறுப்பிள்ளைக்கூட புகழாரம் பாடும். தமிழ் சினிமாவையே ஆட்டிப் படைத்துக்கொண்டிருக்கும் உயர்ந்த மனிதர் விஜய். இவர் தன் நடிப்பினால் மட்டுமல்லாமல் தனது கொடையுள்ளத்தினாலும் மக்களின் மனதைக் கவர்ந்தவர் . இவரின் இயற்பெயர் ஜொசப் விஜய் ஆகும். எஸ். ஏ. சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் ஆகிய இருவரின் ஒரே புதல்வன் விஜய். இவருக்கு தன் பெற்றோர் சூட்டிய பெயர் விஜய் என்றாலும் 'தளபதி' என்று அனைத்து ரசிகர்களாலும் செல்லமாக அழைக்கப்படுகிறார். 1999 இல் விஜய் இந்து இலங்கைத் தமிழரான சங்கீதா சொர்ணலிங்கத்தை மணந்தார். ஜேசன் சஞ்ஜே, மற்றும் திவ்யா சாஷா ஆகியோர் இவரின் பிள்ளைகள். பலர் மனத்தில் எழக்கூடிய கேள்வியை என்னால் உணர முடிகிறது. "என்ன இது ? என்னைக் கவர்ந்த மனிதரைப் பற்றி கேட்டால் அனைவரும் பேரறிஞர்கள் மற்றும் மஹான்களைப் பற்றித் தானே கூறுவார்கள் ! ஆனால், விஜயா ? ஒரு நட